முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பளூ தூக்கும் போட்டியில் 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்திய 90 வயது மூதாட்டி.

By Web Desk

Published on:

---Advertisement---

தைவானில் நடந்த பளூ தூக்கும் போட்டியில் 90 வயது மூதாட்டி செங் சின்னா என்ற வயதான பெண், 35 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்தப் போட்டி, 70 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கக் கூடிய பிரிவில் நடத்தப்பட்டது. இதன் மூலம் மூதாட்டி, உடல்நலம் மற்றும் வயதுக்கு எந்த தடையும் இல்லை என்பதை நிரூபித்தார். “கடினமான பயிற்சியைத் தொடர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்” என்று செங் சின்னா கூறினார்.

மொத்தம் மூன்று சுற்றுகளில், அவர் 35, 40 மற்றும் 45 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கினார். இது அவரது உழைப்பையும் மனதையும் பிரதிபலிக்கிறது.